எழுதாத கவிதை

உன்னைப் பற்றிய
கவிதை ஒன்றை
எழுததொடங்கினேன்
வார்த்தைகள்
வருவதும்
தொலைவதுமாக
முடிந்துவிட்டது
என் கவிதை...

எழுதிய என் கவிதையை
எங்கே என்று தேடினேன்
எதிரில் நீ
உன் உதட்டோர
புன்னகையில்
ஔிந்திருந்தது
என் கவிதை.
நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (26-Feb-17, 8:53 pm)
பார்வை : 364

மேலே