கற்றுக்கொள்

உதிர்வது
இலைகளின் தற்கொலையல்ல,
மண்ணில் விழுந்தாலும்
மக்கி
மரத்துக்கு உரமாவோமென்ற
நம்பிக்கை..

மனிதா நீ
மரத்திடம் கற்றுக்கொள்ளாமல்
வெட்டுகிறாயே,
வெட்கமின்றி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Feb-17, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : karrukkol
பார்வை : 111

மேலே