வாழ்க்கையின் வடிவம்

கேட்பதையெல்லாம் தருபவன் கடவுளென்றால் _ ஏழைகளுக்கு அவன் கிடையாதா ?

கொடுப்பதையெல்லாம் ஏற்பவன் மனிதனென்றால்_நோய் நொடிகளின் எண்ணிக்கை குறையாதா ?

வாழ்வனைத்தும் அவன் வரைந்ததென்றால்_வரும் வலியனைத்தும் அவன் கிறுக்கல்களா?

பூவனைத்தும் புன்னகையென்றால்_அவை வாழும் தருணமும் நீளாதா?

பிரிவனைத்தும் அவன் விதித்ததென்றால்_பிறர் வாழ்க்கை பயனும் முடியாதா ?

முடிவனைத்தும் முற்று புள்ளியென்றால்_மனிதர் வாழ்வே மயானமாகாதா??

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (27-Feb-17, 11:06 am)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 261

மேலே