வாழ்க்கையின் வடிவம்
கேட்பதையெல்லாம் தருபவன் கடவுளென்றால் _ ஏழைகளுக்கு அவன் கிடையாதா ?
கொடுப்பதையெல்லாம் ஏற்பவன் மனிதனென்றால்_நோய் நொடிகளின் எண்ணிக்கை குறையாதா ?
வாழ்வனைத்தும் அவன் வரைந்ததென்றால்_வரும் வலியனைத்தும் அவன் கிறுக்கல்களா?
பூவனைத்தும் புன்னகையென்றால்_அவை வாழும் தருணமும் நீளாதா?
பிரிவனைத்தும் அவன் விதித்ததென்றால்_பிறர் வாழ்க்கை பயனும் முடியாதா ?
முடிவனைத்தும் முற்று புள்ளியென்றால்_மனிதர் வாழ்வே மயானமாகாதா??
_கிறுக்கி