ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


சேற்றில் மிதந்தும்
அழுக்காகவில்லை
நிலவு !

களவும் கற்று மற அன்று
களவும் அற்று
மற !

சேற்றில் மலர்ந்தும்
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !

பணம் சேர்ப்பு
இல்லாத பேய்
இருப்பதாகக் காட்டி !
.
அழிந்தது
நேர்மை
அரசியல் !

முடிக்கலாம் அதிகவேலை
அதிகாலை எழுந்தால்
சாதிக்கலாம் !

அன்பே சிவம்
சிவன் கரத்தில்
சூலாயுதம் !

காண்பதும் பொய்
சுற்றுவதாகத் தோன்றும்
சுற்றாத சூரியன் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Feb-17, 12:45 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 113

மேலே