பரத நாட்டிய அரங்கேற்றம்

நாட்டிய அரங்கேற்றம்
====================

ஆசானிடம் ஆசிபெற்று பரதமெனும்..
**ஆடற்கலை அறவேபயின்ற அற்புதமேயுன்..
அரங்கேற்றம்கண்ட கலைஞர்கள் பலரால்..
**அரங்கம் நிரைந்து வழிந்ததம்மா!

ஆடும்கலைபயின்று அபிநயம்காட்டு முன்னழகால்
**ஆடற்கலைக்கு நீயோர் எடுத்துக்காட்டானாய்
நடனத்தின் தலைவன் நடராசனின்
**நல்லாசிகள் என்றுமுனக்கு உண்டு!

உன்விழிகள் பேசுமதன் பொருளை..
**உணர பன்புலமை வேண்டுமம்மா!
உன்நடனத்தைக் கண்டுவிட்டால் ஒருகணம்..
**தன்னிலை மறந்து தடுமாற்றம் கொள்ளுதம்மா!

கணுக்காலை கண்தரிசிக்க உடல்வளையும்..உன்
**கைக்குறிகள் நடனசூட்சுமத்தை விளக்கும்!
நடனத்தால் பேசுகின்றயுன் நளினத்தால்..
**நடனரங்கம் இமயம்போல் மெளனமாகும்!

பாடலின் வரிகளுக்கேற்ப வளைந்தயுன்புருவம்..
**பாவம்ராகம்தாளம் ஸ்ருதியனைத்தும் சேர்க்குதம்மா!
தத்தித்தத்தி நீயாடும் நடனத்தால்..விழி..
**பொத்திப்பொத்திமூடாமல் காண்பவரைக் காக்குதம்மா!

அரங்கம் வியக்க ஆனந்தக்கூத்தாடி..உன்
**அங்கமாறின் அபிநயத்தால் பரதக்கலையெழும்!
பாதங்கள் பலமாய் தரையையுதைக்கும்..
**பாவம்தனைக்கண்டு கைதட்டும் ரசிகர்கூட்டம்!

உன் சதங்கைகளின் சத்தத்தால்..
**உள் அரங்கத்தின் அமைதி அதிகமாகும்!
உன் கைவிரல்பல முத்திரைகாட்ட..அந்த
**ஆடலறங்கமிப்போது ஆசிவழங்கும் அரங்கமானதோ?

கவிதைப் போட்டிக்காக அனுப்பட்டது

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (27-Feb-17, 6:09 pm)
பார்வை : 254

மேலே