வலிகள் - சகி
எத்தனை பக்கங்கள்
உனக்காக நான்
கிறுக்கினாலும் - என்
வலிகளை நீ என்றுமே
உணரப்போவதில்லை ....
வெற்றுகாகிதமும்
ஒன்றுதான் ....
உனக்காக நான்
எழுதும் ஆயிரம்
கவிதைகளும் ஒன்றுதான் ....
இரண்டிற்குமே வித்தியாசம்
உணராத என் காதலன் தான்
என்றுமே நீ .....ம்
என்னை நீ
என்றுமே உணராத
புரிதலில்லாத காதல்தான் .....
வலிகள் மட்டுமே
நிரந்திரமான காதலன்
தான் என் காதல் .....