நெடுவாசல் விவசாயக்கொடி

தமிழகமே
திரண்டது
வாடிவாசலை
திறந்தது
எதிர்ப்பது
இந்திய அரசாகவே இருந்தாலும்
எதிர்த்தது
வீரத்தமிழ் சிங்கங்கள் என்பதால்
இந்திய அரசே பணிந்தது
வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்
உடனே நடந்தது
நெடுவாசலும் அப்படித்த்தான்
நம் போராட்டத்தால்
நம் ஒற்றுமையால்
உடனே திறக்கும்
நெடுவாசலின்
விவசாயக்கொடியும்
வானுயர

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (28-Feb-17, 7:10 pm)
பார்வை : 112

மேலே