அம்மா எனும் அதிசயம்

அம்மா எனும் அதிசயம்
மனித பிறப்பின் மகத்துவம் !
தாயெனும் உயிரொன்றே உலகில்
அன்பெனும் தத்துவம் அகிலத்தில் !

உறவில் உன்னதம் அன்னை
ஈடில்லை அவருக்கு எவருமிங்கு !
பாசத்தில் உருகிடுவார் பனியாய்
நேசத்தில் உயர்ந்தவர் மறுப்பேது !

தவறுகள் செய்தாலும் தனயனை
தட்டிக் கொடுப்பார் மன்னித்து !
புத்திமதி கூறியே வளர்த்திடுவார்
புத்திரப் பாசத்தில் புனிதரவர் !

உறங்கிடும் வேளையிலும் உறங்காது
உயிராய் காத்திடுவார் கண்னாக !
நலமில்லா நேரத்தில் தாதியாவார்
நலமாய் நாமிருக்க தவமிருப்பார் !

இரக்கத்தில் இணையிலா இமயமவர்
இன்னுயிர் இதயமவர் இவ்வுலகில் !
அதிசயங்களுள் அதிசயம் அன்னையே
​அம்மா என்றழைக்கா உயிரில்லையே ​

​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Mar-17, 8:05 am)
பார்வை : 917

மேலே