விண்ணைத்தாண்டி வருவாயா

பால்வீதி ஓடையில் பொன்நிற வேளையில்
உன் கைகோர்த்து மிதந்திட தோனுதடி
விண்மீன் புடை சூழ பகலவனும் நிலவனும் நமை காக்க வேணுமடி
உன் ஈர்ப்பிசையில் நானிருக்க என் ஈர்ப்பிசையில்
நீ இருக்க காதலின் விசையில் வாழ்வோமடி
உயிர் காற்று குறையும் தருணத்தில்
மீதமிருக்கும் உயிர்மூச்சின் பங்கிட்டில் மீளுயிர் சுவாசம் கொள்வோமடி
பேரண்ட வலையில் சுற்றி திரிவோமடி
வான் கடந்து நமை பிரிக்க ஒரு கூட்டம வந்தால்
எரிக்கல் கொண்டு எறிந்திடுவோமடி
காதலின் ஒவ்வொரு அனுவையும் ரசிப்போமடி
இவ்வளிமண்டலம் முழுதும் காதலை நிரப்பி நிறைவோமடி

எழுதியவர் : ப்ரசன்ன ரணதீரன் புகழேந்த (3-Mar-17, 2:49 pm)
பார்வை : 163

மேலே