வேடிக்கை பாராதே - குறுங்கவிதை
விபத்தினிலே சிக்குண்டு வேதனையாய் இருக்கின்றார்
விளம்பரங்கள் பார்த்திடுவார் விதியெனவே ஒதுங்கியுமே
வேடிக்கை நிகழ்வாக எண்ணியே உதவாது போகின்றார் .
மானிடனே கேட்பாயாக ! உனக்குமே இந்நிலைமை
வந்தாலே என்செய்வாய் ! துடிக்கின்ற போழ்தினிலே
துயர்துடைக்காது போகின்ற கீழ்நிலைச் சமுதாயம் !!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்