தமிழ் என் உயிருக்கு நேர்

குறிலும் நெடிலும் இணைந்தவள் ஆனேன் தமிழால் .....

அகம் எது
புறம் எது
பேதம் அறியாதவள் ஆனேன் தமிழால் .....

மனிதனாக வாழ்கிறேன் தமிழால் .....

பெண்மைக்குள் மென்மையும் உண்டு
வெம்மையும் உண்டு
அதை முடிவு செய்வது நான் அல்ல
என் எதிரில் நிற்கும் நரன் .....

உங்களுக்கு என்னை கொல்ல வேண்டும் என்றால்
என்னோடு நேருக்கு நேர் நின்று
எனக்கு சரிக்கு சமமாய் சண்டையிட்டு
நான் உங்களை கொல்லுவதற்கு முன்
என் நெஞ்சத்தில் குத்தி சாயுங்கள்
புன்னகைத்துக்கொண்டே நிற்பேன்
எங்கும் ஓட மாட்டேன்
எதிர்த்து நிற்பேன் எந்த நொடியும்
என்னோடு நான் குடித்த என் தாய் பால் தமிழ் பாலின் வீரம் நின்று சண்டை இடும் உங்களோடு ....
ஒருபோதும் யார் முன்னும் மண்டியிட மாட்டேன் ......
புற முதுகிட்டு ஓட மாட்டேன் .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Mar-17, 5:27 pm)
பார்வை : 337

மேலே