வஞ்சனை

அழகிய பெண்ணே !
பாவை கொடியே !
பதுமை கண்ணே !
மெல்லிடை சிலையே !

எண்ணிலா வர்ணனை
எண்ணற்ற ஒப்பனை
எத்தனை கவிதைகள்
அவளுக்கு........

வர்ணனை அனைத்தும்
வெறும் ஏட்டிலும்
வாய்மொழியில் மட்டுமோ !

கற்பனை வார்த்தைகள்
கவியில் மட்டுமோ !

வர்ணனை யாவும்
எண்ணத்தில் இல்லையோ !

வர்ணித்து அழகிய
வார்த்தை கூறி
வஞ்சிப்பது ஏனோ !

மதிப்பதென கூறி
மிதிப்பது ஏனோ !

சுதந்திரம் தருவதென
சுடுகாட்டிற்கு அனுப்புவதேனோ !

ஏன் இந்த
வஞ்சனை !

எழுதியவர் : புகழ்விழி (5-Mar-17, 1:55 pm)
சேர்த்தது : புகழ்விழி
Tanglish : vanjanai
பார்வை : 244

மேலே