வஞ்சனை
அழகிய பெண்ணே !
பாவை கொடியே !
பதுமை கண்ணே !
மெல்லிடை சிலையே !
எண்ணிலா வர்ணனை
எண்ணற்ற ஒப்பனை
எத்தனை கவிதைகள்
அவளுக்கு........
வர்ணனை அனைத்தும்
வெறும் ஏட்டிலும்
வாய்மொழியில் மட்டுமோ !
கற்பனை வார்த்தைகள்
கவியில் மட்டுமோ !
வர்ணனை யாவும்
எண்ணத்தில் இல்லையோ !
வர்ணித்து அழகிய
வார்த்தை கூறி
வஞ்சிப்பது ஏனோ !
மதிப்பதென கூறி
மிதிப்பது ஏனோ !
சுதந்திரம் தருவதென
சுடுகாட்டிற்கு அனுப்புவதேனோ !
ஏன் இந்த
வஞ்சனை !