திங்கள் சிரித்தது தேய்பிறைக் கீற்றினில்
திங்கள் சிரித்தது தேய்பிறைக் கீற்றினில்
தென்றல் அசைந்தது தென்னைதன் கீற்றினில்
அல்லி முழுமதி வேண்டி குளத்தினில்
மொட்டாய் முழுதும் மலராதேக் கத்தினில்
நல்லிரவு மென்மை விரியுது வானினில்
நட்சத் திரங்கள் மினுங்குது பால்வழியில்
சொல்லத் துடிக்குது என்மனம் எல்லாம்
அழகுக் கவிதை எனக்கு !
பல விகற்ப பஃறொடை வெண்பா