அவளும் நானும்

அவள் நிலவை தலையனையாக
வைத்து உறங்கும் வேளையில்
நான் அவளின் நினைவுகளை
தலையனையாக வைத்து
உறங்குவேன்!,

அவள் விடியலை காண
ஏங்கும் வேளையில் நான்
அவளின் விழியினை காண
ஏங்குவேன்!!,

அவள் ஒருபோதும் என்னை
விரும்பி பார்த்தது இல்லை! இருந்தும்
ஒருநாளும் நான் அவளை
வெறுத்து பார்த்தது இல்லை,

ஒருநாளும் அவள் என்னை
திரும்பி பார்த்து இல்லை ஆனால்
அவளை பார்க்காமல் நான்
திரும்பியதே இல்லை,

அவள் கண்களால் என்னை
இதுவரை கண்டது இல்லை!
ஆனால் நான் அவளின்
கண்களை காணமல் ஒருநொடி
இருந்தது இல்லை,

எந்நாளும் என்னை அவள்
உறவாக நினைத்தது இல்லை
இருந்தும் என் உயிரே அவள்தான்!,


அவளும் நானும்
அன்பால் அறைநொடி
இனைந்தது இருந்தது இல்லை!
இருந்தும் இருக்கின்றோம்
அயுள்வரை இணையாமல்....
..............................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (6-Mar-17, 7:30 pm)
Tanglish : avalum naanum
பார்வை : 413

மேலே