உறுதியோடு

உதிர்ந்து விடுவோம்
என்று

ஒரு பொழுதும்

பழுத்த இலைகள்

கவலை கொள்வது
இல்லை!

உதிர்ந்த பின்
மண்ணிற்கு,

உரமாவோமென்று
தெரிந்ததாலோ?

நான் மட்டும்

கவலை கொண்டு
ஏன்

தளர்ந்து போக
வேண்டும்?

வாழும் உதாரணமாய்,

இறுதி வரை
உறுதியோடு..,
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (7-Mar-17, 8:08 pm)
Tanglish : uruthiyodu
பார்வை : 307

மேலே