உறுதியோடு
உதிர்ந்து விடுவோம்
என்று
ஒரு பொழுதும்
பழுத்த இலைகள்
கவலை கொள்வது
இல்லை!
உதிர்ந்த பின்
மண்ணிற்கு,
உரமாவோமென்று
தெரிந்ததாலோ?
நான் மட்டும்
கவலை கொண்டு
ஏன்
தளர்ந்து போக
வேண்டும்?
வாழும் உதாரணமாய்,
இறுதி வரை
உறுதியோடு..,
#sof_sekar