அவள்

அவள்
இன்னும் என்னுள்
உறங்கிக்கொண்டு தான்
இருக்கிறாள்......,

விழிகள் திறக்க
மறுக்கும்
ஒரு மழலையைப் போல...,

உறைந்து போன என் கனவுகளோடு.....,
சாயமிழந்த என் வர்ணங்களோடு....,

நிழல்களுடன்
உறவாடித் திரிந்த
ஏகாந்த நொடிகளை
திருடி
என்வானில்
இரட்டை நிலவுகளாக்கி
வன்மம் செய்யும்
வாலிப ரசாயனங்கள் .......,

நான் நிற்க.........,
என்னை விட்டு விலகிப்போன துருவம் அவள்......,

என்னின் உணர்வுகளும்
மூர்ச்சையாகிப்போன
கந்தக இரவின்
வனப்புகளில்
கனாக் காண்கிறாள்
அவள்...........,

எழுதியவர் : haathim (7-Mar-17, 10:55 pm)
Tanglish : aval
பார்வை : 263

மேலே