நான் ஓர் ஆணாதிக்கத்தின எச்சமாய்

பெற்றெடுத்தவளைப் பெற்றெடுத்தவள்...
பெற்றெடுத்தவள்...
பெற்றெடுத்தவள் பெற்றெடுத்தவள்…
சரியான கணித்தைக் கற்றுக்கொடுத்தவள்…
எந்த திறமையும் இல்லாமல் இருந்த
எனக்கு எழுதகற்றுக்கொடுத்த கயல்கள்...
கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் கயல்கள்...
எனது நாளைய பயணத்தில் எனக்கான
வாழ்க்கையை இன்பமாக்க எங்கேயோ
எனக்காகக் காத்திருப்பவள்…
என்று வளர்ச்சியில் மகிழ்ச்சியல் பங்குபெற்ற
பங்குபெற்றுக்கொண்டிருக்கும்
பங்குபெறப்போகும் அனைவரும் பெண்களாய் இருக்க
நான் மட்டும் ஏனோ ஓர்ஆணாதிக்கத்தின் எச்சமாய்???

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (8-Mar-17, 7:47 am)
பார்வை : 123

மேலே