மகளிர் தினம் - பெண்ணே உனக்காக

பெண் பூக்கள்
பூத்திருக்கு
பூமியிலே💐💐💐...

பெண்ணே!
விண் அளந்தோம் ,
மண் ஆண்டோம்
என்பதில் இல்லை
பெருமை...

எத்தனையோ
சீதைகள் இன்னும்
வீட்டுச் சிறையில்
இருக்கின்றனர்
என்பதுதானே உண்மை...

சீதையாக இருந்து
சீரழிந்தது போதும்
தன்மானம் காக்க
எழுவாய் நீ..

நீ முன்னேற ஓர் அடி
முன்வைத்தால்
ஓராயிரம் அடி
பின் இழுக்கும் இச்சமூகம்...

"அறுத்து எறியப்பட வேண்டும்
அர்த்தமற்ற சடங்குகள்"...

உடைத்து
வெளியே வாருங்கள்!!!
உங்களுக்காகவே
இவ்வுலகம்
படைக்கப்பட்டதாக
உணர்வீர்கள்...

பெண் மானம்
மதிப்பிழந்த
இந்த பூமியிலே..
"விலைமாதுவானாலும்
விலைபேச முடியாதம்மா
பெண் மனதை"!!!

அன்று
"தன்மானம்"காக்க
பூமி புகுந்த சீதையாக
இருந்திடாதே பெண்ணே!!!

குழவியாக,
குமரியாக,
மனைவியாக,
தாயாக இருந்ததெல்லாம்
போதும்!!!...
நீ தன் மானம்
கொண்ட பெண்ணாக மாறு!!

அச்சம், மடம், நாணம்
கொண்டது மட்டும்
அல்ல பெண்மை...

"பயிற்ப்பு"எனும்
நுண்ணறிவு கொண்டு
பெண்ணாக
சாதித்து காட்ட வேண்டும்
என்பது தான் உண்மை...

உன் முடிவை நீயே எடு!
இந்த உலகமே உன் வசம்!!
வாழ்க பெண்மை!!!

எழுதியவர் : எம் அம்மு (8-Mar-17, 10:46 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 1038

மேலே