முழுமதி

முழுமதியை உன் முகத்திற்கு உவமையாக்க
நான் ஒன்னும் கவிஞன் அல்ல பெண்ணே!
அந்த முழுமதியை என் கண்ணில் சிறைவைத்து
பரிசளிக்கும் உன் காதலன் பெண்ணே!
அந்த கயவன் மரணத்தை சூட்சமமாக வைத்தான் !
அதை ஏன் உன் கண்களில் வைத்தான் பெண்ணே ?
உன்னை கேசாதி பாதம் வரை பாட
என்னால் இயலாது பெண்ணே!
ஏனென்றால்
உன் கயல் விழியை பாடவே
என் ஆயுள் பத்தாது!
உன் கார்குழலிடை அசைவு
வெளியிடும் காற்று போதும் பெண்ணே!
என் ஆயுள் முழுதும் நான் சுவாசிக்க

எழுதியவர் : ப்ரசன்ன ரணதீரன் புகழேந்த (9-Mar-17, 6:32 pm)
Tanglish : muzhumathi
பார்வை : 99

மேலே