கவிதை கிறுக்கி அவள்
எளிதில் கவிதையெல்லாம் எழுதி விடுகிறாய் டா !
என்னை பார்த்து நேரில் ஒரு கவிதை சொல்லேன் டா !
என்கிறாள் !! கிறுக்கி !!
எனக்கு
"கவிதை " பார்த்து "கவிதை"
காப்பி அடிக்க தெரியாதே !! என்று சொன்னால்
வெட்கப்பார்வை பார்த்து இன்னும் நிறைய கவிதைகளுக்கு
தலைப்பும் வரியும் கிடைக்க செய்துவிடுகிறாள்
"கள்ளி "