மகளே உலகம்

சுனாமி உணர்கிறேன்
ஒரு சொட்டு நீரில்
மகள் அழுகையில்...!

இருகையால் உணவள்ளி
மகள் இதமாக உண்ணுகையில்
சமதர்மம் கற்கிறேன்...!

அலுவலக இருளில்
ஞாயிறு நான் மறைய
மகள் முகம் இருட்டிப்போகிறது....!

விசும்பும் பொய்விசும்பல்
கற்கிறது குசும்பு மகளிடம்
வெறும் இடியுடன் மழையின்றி....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன்... (11-Mar-17, 1:11 am)
Tanglish : magale ulakam
பார்வை : 163

மேலே