உன்னை நினைத்து ஏனடி என்னை ஏங்கவைக்கிறாய் 555

என்னவளே...

மலர்ந்து வாடிய ரோஜா போன்ற
உன் இதழ்களும்...

இரவினில் கொள்ளைகொள்ளும்
அல்லிப்பூ கண்களும்...

மழலை போன்று போலியில்லா
உன் புன்னகையும்...

நீ என்னை கடந்து போனால்
உன் கால்சலங்கை ஒலி ஓசையும்...

என்னை தினம் தினம்
ஏங்க வைக்குதடி கண்ணே...

நீ என்னை திரும்பி
பார்க்கும் போது...

முறைத்துப்பார்ப்பாய் மறுவினாடியே
சிரித்துவிடுவாய் என் முகம்கண்டு...

உன் பொய்க்கோபம் கண்டு வாடிவிடும்
என் முகத்தை காணமறுப்பவள்...

நித்தம் ஏனடி உன்னை
நினைத்து ஏங்க வைக்கிறாய்...

எப்போதும் மலர்ந்தே
காணும் உன் முகம்...

என்னை கண்டால் மட்டும்
ஏனடி வினாடி கோபமாக...

உரிமை உள்ளவரிடம்
மட்டுமே...

கோபம் புன்னகை கொடுக்க
முடியுமென்று உணர்ந்தேனடி...

உன் கோபமும் புன்னகையும்
எனக்கு மட்டும்தாண்டி...

என் உள்ளம் உனக்கு
மட்டும்தாண்டி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Mar-17, 8:20 pm)
பார்வை : 546

மேலே