பெருமதிப்பு பெறும்

பழகியவரிடம் தோன்றுவது
பாசமெனும் அன்பு,
பழகாதவரிடம் உணரப்படுவதோ
இரக்கமெனும் அருள்,
ஒரு வட்டத்திற்குள் சுழலும்
அன்பு குறுகலானது,
அருள் ஓர் நேர்கோடு
எல்லை இல்லாதது

இளமையில் கைகொடுப்பது
அன்பும், அறிவும்,
முதுமைக்கு துணையாவது
அருளும், ஞானமும்
அறிவுடன் அநுபவமும்
சேரும்போது ஞானமாகும்
இளமையும், முதுமையென
மரியாதை பெறும்

எப்போதும் தேடிக்கொண்டே
இருக்கும் அறிவு—ஆறுபோல
ஓடிக்கொண்டேயிருக்கும்
தெளிந்து காணாது,
ஞானமோ பெரிய ஏரிபோன்றது
அமைதியாய்க் காட்சி தரும்
தெளிவுற்று இருக்கும்
பெருமதிப்பு பெறும்,

எழுதியவர் : கோ. கணபதி. (14-Mar-17, 8:48 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 40

மேலே