வறுமை
வயிற்றிற்க்குச் சவுக்கு..
ஏழை பிழைப்புக்குள் முளைத்த மிடுக்கு..
உள்ளம் உருக்கி,
உயிரை உருக்கி
மலச் சந்தை உருக்கும்..
எவரையும் கெடுக்கும்,
ஏலனமாய் சிரிக்கும்...
இவர் சொல்வார்....வறுமை
அவர் சொல்வார்.....வறுமை
எவர் சொன்னாலும்,
இக்கதை எழுதி கிழித்தாலும்...
வாய்த்தவன் நுகர்வான்..
அச் சிலுவையின் அடர்த்தி..
மூத்திரமும் பருகி..
முறையிட்டழுதேன்...
முகத்திரை விலக்கு...
இவ் வறுமையை துரத்து..
- சங்கர் சிவக்குமார்