இரவிலும் மலரும் வண்ணமலர் 555

என் தோழனே...

இருள் வந்தால் விடிகிறது
புயல் வந்தால் அமைதி வருகிறது...

துயரங்களை கண்டு நீ
வாடிவிடாதே...

வசந்தம் வரும் என்பதை
மறந்துவிடாதே...

பகலில் நீ சென்ற பாதையில்
நீயே இரவில் செல்ல மறுக்கலாமா...

பகலில் நீ மெல்ல
விழித்தாள் போதும்...

இரவில் நீ இரண்டு மடங்காக
விழித்துக்கொள் என் தோழனே...

உன் காலடியில்
பல சாதனைகள்...

இரவில் மலரும் மலர்களும்
இருக்கிறது...

நீ மறந்துவிடாதே அதற்கும்
வண்னமுண்டு...

வாசமுண்டு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Mar-17, 8:28 pm)
பார்வை : 214

மேலே