தண்ணீர்

தண்ணீர் தேடிய தமிழ்நாட்டின் நிலமை கண்ணீர்ரானது
அரசன் அணைகள்
கட்டி தண்ணீர்
தந்தான் அன்று...

அரசியல் வாதி நதிகள் இணைக்க
நாடகம் ஐம்பது வருடம் தாண்டியது
தண்ணீர் தேடிய தமிழன் உள்ளம்
வாடி உயிர் ஊசல் ஆடுகிறது..

தமிழனை காப்பாற்ற நதிகளை
இணைக்க வேண்டும்
அண்டை மாநிலமே அணைகட்டை
அன்போடு திறக்கவேண்டும்..

அனைவரும் இந்தியன்
என்பதை நினைவில் நிறுத்த
வேண்டும்
தமிழினமே தண்ணீருக்கான
தீர்வுக்கு தயார் ஆகுவோம்...

தண்ணீர்  தேடும் தமிழனே
அணைகள் உன்
கண்ணீரை துடைக்கும்
அணையே மனிதன் சொல்லால்
அடைபடாதே....

தமிழ் மண்ணுக்கு உயிர்தர
விரைந்து வா
தமிழனின் வாழ்வை
துளிர்க் செய்
தமிழனின் குரல் கேட்டு...

எழுதியவர் : சிவசக்தி (15-Mar-17, 7:55 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : thanneer
பார்வை : 299

மேலே