சாளரம்

சக்தி வாய்ந்த அம்மன்
பிள்ளை வரம் கொடுக்கும்
பூசாரி

வந்த வேலை முடிந்ததோ?
வடக்கு நோக்குகிறது
காற்றோடு மழை

மண்ணை தின்ற குழந்தை
வாய்திறந்து பார்த்தேன் காணவில்லை
உலகம்

கடலில் துள்ளி குதித்த மீன்
விடுபட்டு போனது
நீலம்

இறந்த வீட்டுக்காரர்
சத்தமிட்டு அடித்துக் கொள்கிறது
சாளரம்

திரண்ட மேகம்
காற்றுக் கெதிராய் நகர்கிறது
வானம்

விளையாடும் சிறுவர்கள்
இப்படியும் அப்படியுமாய்
பத்தாம்வகுப்பு கண்கள்

இழவு வீடு
தாமதமாய் வருகிறது
மழைத்துளி

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (15-Mar-17, 10:32 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 97

மேலே