அன்பு
உணர்வுகளின் கண்ணாடி
கண்களின் ஈர்ப்பு
எனது,
குறை கொண்ட பிறை
உன் வரவால்
முழு பௌர்ணமியானதே!
உறவு, நட்பு
என்னும் இருவகை உணர்வின்
மூலம்
இன்பச் செல்வத்தை
அள்ளிக் கொடுக்கும் புதையல் நீர்!
நீ உயிரினங்களின் மீது
வைக்கும் பரிவுணர்வுக்கு
விலை நிர்ணயிக்க முடியுமா?
உன்னை
மூன்றெழுத்தால் அழைக்கும் போது
இவ்வுலகில் வேலியுன்டோ?
இறைவனாக வணங்கும்
என் அம்மாவின்
வடிவம் தான் நீ
நீ என்றும்
என் நினைவில் நிற்பாய்
அன்னையின் வடிவமாய்.