உன் இமைகளோடு என் இமைகளை சேர்த்து கொள்ளடி 555

ப்ரியமானவளே...

உன் பார்வையால் என்னை
சிறையெடுத்தாய்...

எனக்கு உயிர் கொடுத்த என்
அன்னைக்குப்பின் நீதானென ஏங்குகிறேன்...

உன் பார்வை சிறையில் இருக்கும்
என்னை விடுதலை செய்வாயா...

மறுவினாடியே சிறையிலிடு
உன் இதயத்தில்...

என் காதலை நீ
ஏற்காத போதும்...

உன்னை நினைத்து எலும்பாக
உருகிவிட்டேன் நான்...

சருகாய் நான் மண்ணில்
விழுமுன்...

நான் உன் முதல்
குழந்தையென ஏற்றுகொள்ளடி...

இல்லை சருகாய் எரிந்து
சாம்பலாகிவிடவா...

இறைவன் என்னை
வாழவைத்து பார்க்கிறான்...

நீ என்னை உருகவைத்து
பார்க்கிறாயடி...

முகத்தில் என் சோகம் கண்டு
என் அன்னை வீழ்ந்து துடிக்கிறாள்...

உன் நினைவெனும் நித்திரையில்
இருக்கும் என்னை எழுப்பிவிடடி...

உன் இமைகளோடு என்
இமைகளை சேர்த்துவிடடி...

மாலை பொழுதில் காதலை
சொல்கிறேன் மீண்டும்...

விடியும் பொழுது என் வாழ்வின்
வெளிச்சமாக வேண்டுமென்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Mar-17, 8:19 pm)
பார்வை : 242

மேலே