சிந்தனை சிதறல்கள் -கங்கைமணி

முன்னுக்கு இகழ்
பின்னுக்கு புகழ் -தப்பில்லை.

கண்ணுக்கு திமிர்
கருத்தினால் நிமிர்-தப்பில்லை

உறவிற்கு பிழை
ஊருக்கு உழை -தப்பில்லை.

உதட்டில் சாயம்
உள்ளுக்குள் காயம்-தப்பில்லை

வெறுத்தால் செல்
பிடித்தால் கொள்-தப்பில்லை

தந்தையை திட்டு
தள்ளாடயில் தாங்கு -தப்பில்லை

இலக்கற்று ஓடு ,ஆனால்
எதையாவது தேடு -தப்பில்லை

கொடுக்காமல் செல்,ஆனால்
கொட்டாமல் செல் –தப்பில்லை

புகழுக்காக அலை,ஆனால்
பிழைப்புக்காக உழை -தப்பில்லை

தனிமையில் அழு,பின்
துணிவோடு எழு-தப்பில்லை

நிழல் தரும் மரத்தின்
கிளை ஓடிக்காதே !

நீரில்லா ஊரில்
நீயிருக்காதே !

ஓடாக் குதிரைஊர் போகா உயராத
உன்வாழ் வினில்பேர்வா ழா !

அலைகின்ற மேகம் மழையாகா.. கான்!
நிலையான நெஞ்சம் நலம்காணும்..கேள்!
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (16-Mar-17, 12:23 am)
பார்வை : 222

மேலே