இடைத் தேர்தல்

இடைத் தேர்தல் என்பது
மக்களின் இதயங்களால்
ஆளும் அரசாங்கத்தை
எடை போடுகிற ஒன்று .....

கடைத் திறந்திடுவர்
கட்சிகள் அனைத்தும்
நடை போடுவர்
நாடக நடிகர்கள் ...

அதிசயங்கள் அரங்கேறும்
அவலங்கள் நிறைவேறும்
இருப்பவர் இறப்பர்
இறந்தவர் பிழைப்பர் ...

பரிசுமழை பொழியும்
பரிசுத்தம் பாடுபடும்
இலவசங்கள் ஓடிவரும்
இல்லம் தேடிவரும் அன்பளிப்பு ....

முழக்கங்கள் முற்றுகையிடும்
வழக்கங்கள் வரிசைமாறும்
இழப்புகள் ஈடுகட்டப்படும்
இறுதியில் மறையும் மறக்கும் ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Mar-17, 7:09 am)
பார்வை : 337

மேலே