வெள்ளம் கரைவிஞ்சும் ஆற்றினைப் பார்க்கையில்
வள்ளல்வா னம்வான் மழைஅள் ளிவழங்க
துள்ளு துமனம் தமிழின் கவிதைபோல்
வெள்ளம் கரைவிஞ்சும் ஆற்றினைப் பார்க்கையில்
துள்ளுதுள் ளம்மகிழ் வில்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
சற்று மாற்றி
வள்ளல்வா னம்வான் மழைஅள் ளிவழங்க
துள்ளு துமனம் தமிழின் கவிதைபோல்
வெள்ளம் கரைவிஞ்சும் ஆற்றினைப் பார்க்கையில்
உள்ளம் உவகை தனில் !
இன்னும் சற்று மாற்றி ....
வள்ளல்வா னம்வான் மழைஅள் ளிவழங்க
துள்ளு துமனம் தமிழின் கவிதைபோல்
வெள்ளம் கரைவிஞ்சும் ஆற்றினைப் பார்க்கையில்
உள்ளம் உயருதுவா னில்
இன்னும் மாற்ற வேண்டுமா? முயன்று பாருங்கள் ஆர்வலர்கள் !
கற்பனைக்கு எல்லை ஏது !
----கவின் சாரலன்