அம்மா
கருவறையில் இடம் கொடுத்தாய்
உன் உயிரை எனக்கு தந்தாய்
நீ மறுபிறவி எடுத்தாய்
உன்னை அறியாத முன்னே
என்னை அறிந்தாய்
நான் பேசிய மொழியை
நீ மட்டுமே உணர்ந்தாய்
துயரத்தில் பங்கு கொண்டாய்
என் சந்தோஷத்தை எனக்கே அளித்தாய்
குழந்தையாக பார்த்த என்னை
இன்றும் குழந்தையாகவே பார்க்கிறாய்