தங்கம் விளையும் அங்கம் -கங்கைமணி

தங்கம் விளையும் அங்கம்,எங்கும்
தாகம் தீர்க்கும் பாகம்.எந்தன்
கண்ணில் மறைந்து கருத்தில் நிறைந்து
கனவில் மலரும் கவியாய் வளரும்
.
கவிதை தமிழும் வழியும் குலையும்
காவியக் கவியும் கனிஇதழெழுதும்...,

வளையும் சிலையோ வளரும் கலையோ
கழறும் மனதை உழறும் நாவை
கண்டும் கேட்டும் காணாதிருக்கும்
மோகக்கொடியோ முல்லைமலரோ
இயற்க்கை ஈன்ற இறைவனின் மகளோ

ஈர்க்கும் அவளின்..
இடையின் செழிவில்
உடைந்து இதயம் ஓடும்,அவளின்
உதிர்ந்த நிழலைத்தேடும்.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (17-Mar-17, 9:58 pm)
பார்வை : 204

மேலே