பிரிவில் தானே காதல் கூடும்

பேசாமல் இருந்துவிட்டு போ !
பார்க்காமல் இருந்துவிட்டு போ !
எனக்கென்ன !
கோவத்திலும் நான் திட்டிய வார்த்தைகளை
நினைத்து என்னைத்தானே நினைத்துக்கொண்டு
இருப்பாய் !
யாரேனும் மூடர்கள் சொல்லி இருப்பார்கள்
பிரிந்துவிட்டால் எளிதில் மறந்து விடலாம் என்று !
காதலிப்பவர்களுக்கு மட்டும்தானே தெரியும்
பிரிவில்தான் காதல் கூடும் என்று !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (18-Mar-17, 8:18 pm)
பார்வை : 242

மேலே