காதல் புராணம்
காதல் புராணம்
=================
பூதாபுராணம் மாபுராணம்
மரபில் வந்தவளோ..!
தொல்காப்பியம் தொகுத்த
தொல்லியல் சிலையோ..!
இரு அடியில்
ஒரு அடி முன் வைத்து
என் தோள் மீது சாய்ந்தவளோ...!
இவள்
வானத்தில் மின்னும்
அருந்ததியின் மகளோ...!
வர்ணிக்கத்த வரியின்
அழகில் சிரித்தவளோ...!
நந்தவனத்தில் எனக்காக
புது மழையில் பூத்த
புது மலரோ...!
இதில் யாரென்று
நான் அறியேன்.....
யாம் அறிந்தது எல்லாம்
காதல் பிரபஞ்சத்தின்
என் முன்
வெட்கத்தை பிரசவித்த
என்ன அன்பான
காதலின் காதலி...!
-J.K.பாலாஜி-