வாழை வாழவருது

சீவி சிங்காரித்து
பூச்சூடி பொட்டுவைத்து
தண்ணீர் கொடுத்து
தேநீர் கொடுத்து
சபை வணங்கி
நிலம் பார்த்து நிற்கும்
தொடர்கதை என் வாழ்வில்
என்று முடியுமோ...

குட்டை என்றான் ஒருவன்
நெட்டை என்றான் ஒருவன்
பாட்டு தெரியுமா என்றான் ஒருவன்
பாடச்சொன்னான் ஒருவன்
போய் சொல்லியனுப்புகிறேன்
என்றான் மற்றொருவன்

சந்தையில் விலை பேசுவதுபோல்
கல்யாண சந்தையில்
விலை பேசுகிறார்கள்
இன்னும் இந்த மலர்ந்த
பூவுக்கு தான் விலை குதிரவில்லை...

எனக்கும் மனசிருக்கு
மனசுக்குள் ஆயிரம்
ஆசைகள் இருக்கு
உங்களின் குடும்பம்
வாழையடி வாழையாக வாழ
இந்த வாழை வாழ வருது
வாழவையுங்கள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (19-Mar-17, 7:28 am)
பார்வை : 127

மேலே