சிந்தனை நான் மறந்தேன்

சிந்தனை நந்தவனத் தில்செம் மலர்ப்பூக்கள்
வந்து நிலவும் இளம்தென்ற லும்வாழ்த்த
அந்தி அழகில் அவள்பூ வெனவந்தாள்
சிந்தனை நான்மறந் தேன் !,

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா .

சிந்தனை நந்தவனத் தில்செம் மலர்ப்பூக்கள்
வந்து நிலவுதென் றல்வாழ்த்த - வந்தனள்
அந்தி அழகில் அவள்பூவாய் பொற்சிலையாய்
சிந்தனை நான்மறந் தேன் !

ஒரு விகற்ப நேரிசை வெண்பா .

நேரிசை வெண்பாவாக மாற்றி வடிவமைக்கும் போது கற்பனை விரிகிறது .
ஏற்ற சொற்களால் மாற்றிடும் போது கவிதையின் அழகு மெருகு கூடுகிறது .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-17, 9:43 am)
பார்வை : 69

மேலே