உனக்கு தெரியுமா

ஆண்: உனக்கு தெரியுமா???
பெண்: உனக்கும் தெரியுமா???

ஆ : அன்பே! உன்னால் தான்
நான் கவிஞனாய் திரிகிறேன் என்று உனக்கு தெரியுமா???
பெ : கண்ணே! கவிஞனுக்கு முன்னால் அவன் என் காதலன் என்று உனக்கு தெரியுமா???

ஆ : சூரியனும்கூட கண்கள் கூசிபோவான் உன்னை பார்த்த பின்பு என்று உனக்கு தெரியுமா???
பெ : ஓய்வெடுக்க அந்த சூரியனை வீட்டுக்கு அனுப்பி, உன் பார்வை ஒளிவீச்சிலே எந்தன் நாட்களை கரைப்பேன் என்று
உனக்கு தெரியுமா???

ஆ : ஒட்டிப்போயிருந்த என்
காலி கண்ணங்கள் உப்பிபோய் நிரம்பி வழிய செய்வது உன் முத்தங்கள் என்று
உனக்கு தெரியுமா???
பெ : முட்களுக்கும் சவால்விடும் உன் முள் தோட்ட தாடியில் எந்தன் இதழ்களை கொண்டே முத்தங்கள் பூக்கின்றன என்று
உனக்கு தெரியுமா???

ஆ : போர்க்களத்தில் கூட ஆயுதமின்றி நிற்பேன்
காதல் என்னும் போரை நீ துவக்கும் சமயத்தில் என்று
உனக்கு தெரியுமா???
பெ : போர்களக் காதலில் வெற்றி என்ற ஒன்றே எந்தன் இலக்கல்ல, தோல்வி இல்லா பாதையில் தான் நம் பயணம் என்று
உனக்கு தெரியுமா???

ஆ : உன் காதல் ராஜ்ஜிய கொடுங்கோல் ஆட்சியில் அடிமையாக பணியேற்று உனக்கே சேவை புரிவேன் என்று
உனக்கு தெரியுமா???
பெ : காதல் அடிமையாகிய உன்னை என் இதயசிறையில் அடைத்து விடுதலையில்லா ஆயுள்தண்டனை தருவேன் என் ஆயுள்வரை என்று உனக்கு தெரியுமா???

ஆ : நான் படிக்காத கவிதைகள் எல்லாம் உன் மௌனம்தான் என்று உனக்கு தெரியுமா???
பெ : என் மௌனத்தையும் மொழிபெயர்த்து உனக்கு தோதாக சம்மதம் என்று எடுத்து கொள்ளும் கள்வன் நீயென்று
உனக்கு தெரியுமா???

ஆ : காற்றை எல்லாம் வடிகட்டி உன் சுவாசத்தை மட்டுமே எடுத்து சுவாசிக்கும் என்னை
உனக்கு தெரியுமா???
பெ : உந்தன் வாசத்தை மட்டுமே தேடி கண்டறிந்து சுவாசிக்கும் என்னை உனக்கு தெரியுமா???

ஆ : ஆழ்கடலின் ஆழத்தைவிட உன்னை காதலிக்கும் என்னை உனக்கு தெரியுமா???
பெ : அந்த ஆழத்தையும் அளந்து என் உயிரணுக்களில் எல்லாம் உன்னையே சேகரித்து காதலிக்கும் என்னை உனக்கு தெரியுமா???

ஆ : நிலவான உன்னை மேலும் அழகாய் காட்டும் இருள் நான்தான் என்று உனக்கு தெரியுமா???
பெ : அம்மாவாசை இருளில் உன்னிலே தொலைந்து போன தேய்நிலா நான்தான் என்று
உனக்கு தெரியுமா???

ஆ : போதும்!!! இந்த உலகத்தைவிட உன்னை நேசிப்பது நானென்று உனக்கு தெரியுமா???
பெ : ஆம்!!! இந்த உலகத்தை தாண்டி சென்றாலும் உன்னை மட்டும்
நான் நேசிப்பது
உனக்கு தெரியுமா???

ஆ : ஒத்துக்கொள்கிறேன்! நீ தான் எனக்கான வாழ்க்கை என்று
எனக்கு தெரியும்...
பெ : ஆமோதிக்கிறேன்! நான் இல்லாமல் உன் வாழ்க்கையே இல்லை என்று எனக்கு தெரியும்...

இது அழகான காதலர்களின்
காதல் ஊடல் என்று
நமக்கு தெரியும்...

காதல் யாரையெல்லாம் கேட்டு விசாரித்து நம்மிடம் வருகிறது என்று யாருக்கு தெரியும்???


#ஸ்ரீதேவி#

எழுதியவர் : ஸ்ரீதேவி (19-Mar-17, 9:42 pm)
Tanglish : unaku theriyumaa
பார்வை : 447

மேலே