தவளையின் கனவில்

தவளையின் கனவில்
பாம்பு
வந்தால்.....தவளை
அச்சப்படுவதில்
நியாயம்
உள்ளது.....மனிதா
நீ ஏன்
அச்சத்தில் தவிக்கிறாய்......?
பாம்பின்
நினைவில்
நிலை குலைந்து
தலைதெறிக்க
ஓடுகிறாய்...!?!?

பூனையும்
திரும்பிப்
போனது.....புத்தி
கெட்ட
மனுஷன்
குறுக்கால
போனதால்.....பூனையின்
மனசில்
மாற்றம்.....நிஜமாய்
ஏதோ
ஏமாற்றம்.....!!

கழுதைக்குத்
தெரியும்
கர்ப்பூர வாசனை.....
கோவிலில்
பக்தனின்
கையில் விழுந்தது
சூடு....!

ஆமை
புகுந்த
வீடும்
உருப்படும்.....எவ்வுயிரையும்
வருத்திக்
கொல்லாதவிடத்து.....!!

கூண்டுக்குள்
அடைபட்ட
கிளிதான்......
உன் தடைப்பட்ட
வாழ்வை.....சீராக்கும்
என்று
நம்பி ஒரு
கூட்டம்......!!

ஆன்மீக
கூட்டமெல்லாம்
போடும்
சாமி ஆட்டம்.....
சோமபானத்தின்
சுவையின்
உச்சம் போல
தோணுதே......!!

கதிகலங்கி
கடவுளைக்
காண.....
வந்தவர்
எல்லாம்.....
மதுவில்
மயங்கி.....அல்லது
மகுடிக்கு
மயங்கிய
பாம்பு
போல.....படமெடுத்து
ஆடுது.....இந்த
ஆறறிவு
ஜீவன்கள்
எதைத்
தேடி
ஓடுது......???????

சுக்கிரனும் சூரியனும்
போதாதென்று....
போட்டி போட்டு
புதிய
உருண்டை
தேடுதடா..... இந்தப்
புரியாத
விஞ்ஞானம்......புதிருக்குள்
புதிராக.....!!

எழுதியவர் : thampu (20-Mar-17, 4:45 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 117

மேலே