ஊரோடு சேர்ந்து வாழ

ஊரோடு
ஒற்றுமையாய்
வாழ்ந்து
முடித்து
விட்டுப் போகவே
விரும்பினோம்....ஆனால்
வேரோடு
பிடுங்கி
வீசப்பட்ட
வேளையில்
சிதறிய
விதைகளாய்
தேசம் தேசமாய்
சந்தோசம்
தொலைத்து
வாழ்கின்ற
ஏதிலிகள்
நாம் தானே.....!!

அகதி
என்ற
வார்த்தைக்குள்
அல்ல.....
வாழ்க்கைக்குள்
அகப்பட்டுக்கொண்ட
வேதனையில் என்
அழகு
தமிழ்.....கூட
கவலைப்பட்டு
கண்ணீர்
சிந்துதே.....!!

யுத்தங்களின்
ஓசை
அடங்கினாலும்
கண்ணில்
காண்கிற..... காதில்
விழுகிற
செய்திகள்.....வெடிச்
சத்தங்கள்
மீண்டும்
தொடருமோ
என்கிற
அச்சமே
மனதில் உச்சமாச்சு......!!

எழுதியவர் : thampu (20-Mar-17, 5:22 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 169

மேலே