சிந்தைக்கு வேலைகொடு
பாடுபட்ட தலைவரெல்லாம்
காடுவழி சென்றடைந்தார்
வீறுகொண்ட சமுதாயமோ
கூறுகெட்டு அலைகிறதே
அறவழிப் பாதையென்பதோ
அரக்கர்களின் சாலையானது
அறிவுள்ள உயிரினங்கள்
அரிவாளுடன் திரிகிறதே
தலைவனில்லா நாடானது
தலைமையில்லா படையானது
பொறுக்குதில்லை நெஞ்சமும்
பொறுமையில்லை கொஞ்சமும்
தெரிந்திடா முடிவைநோக்கி
தெறிகெட்டு ஓடும்நிலையின்று .....
புரியாத புதிரல்லவே
புரிந்திடுவீர் நிச்சயம்
அறிந்து செயல்படுக
அறிவார்ந்த சமுதாயமே....
சிந்திக்கும் வேளையிது
சிந்தைக்கு வேலையிட்டு
வருங்கால தலைமுறைகள்
வளர்ச்சியில் தளர்ச்சியின்றி
வளமுடன் வாழ்ந்திடவும்
வலிவுடன் தழைத்திடவும்
வழியொன்றும் கண்டிடவே
பழியென்றும் கூறாதிருக்க
படைத்திடுக புதிய சமுதாயம் !!!!
பழனி குமார்
20.03.2017