தாயின் கருணை
தன் விருப்புகளை மறந்து
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி
கருணையின் இருப்பிடமாய் அமைந்து
வாழ்க்கை தன்னில் விழுந்து விடாமல் இருக்க
பிள்ளைக்கு இறைவனை போல
தினம் தினம் துணை நின்று
அவர்களின் கவலைகளை நீக்கி
பாசம் தன்னை பொலிந்து
பிள்ளையின் மகிழ்வில் உயிர் வாழும் தெய்வம் -அம்மா
அவளின் மனதில் பொங்கி பாயும் பாசம் தன்னை
வடித்திடவே அணு தினம் தமிழ் முத்துக்களில்
சொல் தேடி அலைகிறேன்
உனக்கு நிகராக ஒரு முத்தும் இன்னும் பார்க்கவில்லையே-அம்மா