செக்கு மாடு

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்..

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..

அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு..

அவர்கிட்ட கேட்டான்…

படிச்சவன்:
மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி :
அது பழகின மாடு தம்பி..
அதுவே சுத்திக்கும்..

படிச்சவன் :
நீங்க உள்ளே வந்த உடனே
அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி :
அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி..

சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது..

அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..

படிச்சவன் :
அது சுத்தறதை நிறுத்திட்டு..
ஒரே இடத்துல நின்னு..
தலைய மட்டும் ஆட்டினா..!
அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி :
இதுக்குத் தான் தம்பி.,

நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!

எழுதியவர் : கவிழகி செல்வி (20-Mar-17, 2:55 pm)
Tanglish : sekku maadu
பார்வை : 684

மேலே