வெயில்

அதிக் காலையில்
கிளிகள் கொஞ்ம் நேரத்தில்...
சேவல் கூவும் வேளையில்...
புதிதாய் பூக்கும் பூக்களில்...
சில்லென்று வீசும் காற்றில்...
சற்றென்று பிறந்தேன் வெயிலாய்.....!!!

அந்தி மாலையில்
மஞ்சள் வண்ணம் பூசி...
கடலில் மீனாய் குதித்து...
அலை அலையாய் மிதந்து...
நிலவை செல்லமாய் அழைத்து...
காவலாய் நிற்க வைத்து...
பட்டென்று மறைந்தேன்
மஞ்சள் வெயிலாய்.....!!!!

எழுதியவர் : இதயவன் (21-Mar-17, 1:28 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : veyil
பார்வை : 98

மேலே