பைத்தியக் கவி
இவ்வளவு பெரிய உலகத்தில்,என்னை நம்பி வந்த உன்னை ஏமாற்றியது,
உன் சடலத்தின் கண்கள் பார்த்த பரிதாப பார்வையில்தான் தெரிந்துகொண்டேன்..
கற்பழிக்கப்பட்ட பெண்போல துடித்துக்கொண்டிருந்தாய்,
தனியே தவரவிடப்பட்ட குழந்தைபோல கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாய்,
நான் இட்ட உணவு உன் குடலில் இறங்கியதா என்பதை கூட நான் அறிந்திருக்கவில்லை,
உன் கழுத்தை நெரித்தபடி, என் நண்பனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தேன்,
உன் கதறல் எனக்கு கேட்கவே இல்லை,
என் ஆசை எல்லாம் உன்னை ருசிக்க வேண்டும் என்பதே,
நீ துடிப்பதை நிறுத்த உன் தலையை ஓங்கி தரையில் அடித்தேன்,
வந்த வேலை முடிந்தவுடன்,உடல் முழுக்க கீரல்களுடன் உன்னை ஒரு பையில் அடைத்தேன்,
பின்பு உப்பு மிளகாய் தடவி தவாவில் வருத்தெடுத்து முட்களை நீக்கி ரசித்து ருசித்தேன்....
நீ ஒரு பெண்ணாக இருந்திருக்கும் பட்சத்தில் எதுவுமே தவாவில் நடந்திருக்காது...