வியாபார கணக்கு புதிர் விளையாட்டு- MBA முருங்கைக்காய் வியாபாரம்-

"காண்கு", "நாக்கு" என்ற இரண்டு நபர் முருங்கைக்காய்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்ய முனைந்தனர்.

இருவருக்கு தலா ருபாய் 10/- வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக தரப்பட்டது. அந்த 10 ரூபாயை வைத்து ஒரே நாளில் முருங்கைக்காய் வாங்கி விற்று யார் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற்றவர்கள். என முடிவுசெய்து அன்றய மாலை 6மணிக்கு இருவரும் ஒன்றுகூடி போட்டியின் இறுதியை முடிவுசெய்யலாம் என்று முடிவானது.

இருவரும் அவர்களிடம் உள்ள ரூபாய் 10 ஐ வைத்து, தலா 20 முருங்கைக்காய்களை வாங்கி அவற்றை விற்று லாபம் சம்பாதிக்க வெவ்வேறு பகுதிக்கு புறப்பட்டார்கள். அதாவது ஒரு முருங்கைக்காயின் கொள்முதல் விலை 0.50 பைசா.

நாக்கு:- இவர் இனிமையாக பேசக்கூடியவர் தனது பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்த இழுக்கக்கூடியவர் அதோடு இவர் எதையும் வேகமாக செய்யும் எண்ணம் கொண்டவர் அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை ரூபாய் ஒன்று (1.00) என கூவி விற்கத்தொடங்கினார். முதல் ஒருமணிநேரத்தில் நான்கு 4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே அவர் தமது முந்தய விலையை சற்று குறைத்து 0.75 காசுகள் என விலை குறைத்து விப்பாணை என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் எட்டு (8) காய்கள் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் விலை குறைத்து 0.50 காசுகள் என, "வாங்கிய விலையிலேயே விற்பனை" என கூறி விற்கத்தொடங்கினார். அப்போது 4 காய்கள் மட்டுமே விப்பாணையானது. மீதமிருந்த 4 காய்களை மிகக் குறைந்த விளையான 0.25 பைசாவுக்கு நஷ்டத்தில் விற்றூற்றுமுடித்தார். ஆகமொத்தம் அவரின் 4மணிநேர விற்பனைத் தொகை 4+6+2+1= 13 ரூபாய் கிடைத்தது. கிடைத்த பணத்தை முழுவதுமாக செலவு செய்து 26 முருங்கைக்காய்களை வாங்கி மீண்டும் மேற்கண்டதைப்போலவே விற்பனையை தொடர்ந்தார் அன்று மாலை 6 மணியளவில் அவரிடம் இருந்த அனைத்து முருங்கைக்காய்களையும் விற்று மொத்தம் 28 ரூபாய்களை சம்பாதித்தார் அதாவது 18 ரூபாய் அதிகமாக லாபம் சம்பாதித்தார்.

காண்கு:- பார்ப்பதற்கு சுறுசுறுப்பானவர். எதையும் அழகுபடுத்தி விப்பாணை செய்வதில் வல்லவர். அவருக்கு பசுமையான புதிய முருங்கைக்காய் மீது அதிக நம்பிக்கை வைத்து விற்பனையை தொடர்ந்தார் அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை இரண்டு ரூபாய் (2.00) என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணிநேரத்தில் 2 காய்கள் மட்டுமே விற்பனையாகியது. ஆகவே அவர் வைத்திருந்த முருங்கைக்காய் வெய்யில் பட்டு சற்று வாடி வாதங்கத் தொடங்கியது ஆகவே அவர் மேலும் விலை குறைத்து 1.50 ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஒன்று என்று விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மேலும் 4 காய்கள் மட்டுமே விற்றது. ஆகவே மீண்டும் விலை குறைத்து 1.00 ஒரு ரூபாய்க்கு ஒன்று என விற்கத் தொடங்கினார் அப்போதும் 4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே தொடர்ந்து மீண்டும் விலை குறைத்து 0.75 எழுபத்தி ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்கத் தொடங்கினார் அப்போதும் முருங்கைக்காய் சற்று வாடி வதங்கிவிட்டபடியால் 4 காய்கள் மட்டுமே விற்பனையானது ஆக அன்றய மாலை 6 மணியளவில் மீதமிருந்த 6 காய்களை வாங்கிய விலைக்கே விற்றுப்பெற்ற தொகையாக மொத்தம் 4+6+4+3+3=20 ரூபாய்.

இப்போது காண்கு:- 20 ரூபாயும், நாக்கு:- 28 ரூபாயையும் சம்பாதித்தார் ஆகவே அதிகம் சம்பாதித்த நாக்கு வெற்றிபெற்றவராவார்.

இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்வது, நஷ்டத்தில் வியாபாரம் செய்தாலும் நாக்கு திறமையாக அதிகம் லாபம் சம்பாதித்தார், மேலும் நம்மிடமுள்ள முதலீட்டை ஒரு இடத்தில் தங்கிவிடாமல் விரைந்து செயல்பட்டு பலமடங்காக்கிய விதம் அவருக்கு நன்மை கிடைப்பதோடு, அதிக முறை வாங்கி விற்று செலவு செய்வதால் ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் அவர் சிறந்த பங்குவகிக்கிறார்.

ஆகவே சிறந்த விற்பனையாளர் என்பவர், அவரது விற்பனை விற்றுத் தீரும்வரையில் காத்திருப்பதைவிட. புத்திசாலித்தனமாக ஏற்றத தாழ்வுகள் இருந்தாலும் வேகமாக கிடைக்கும் விலைக்கு விற்று, மேலும் மேலும் பல விற்பனைக்கு தாவுவதே சிறந்த விற்பனை தந்திரமாகும்.

நஷ்ட விற்பனை விலையிலும் லாபம் சம்பாதிக்கும் இந்த முருங்கைக்காய் வியாபார உதாரணம், முதுகளைப் பட்டதாரிகளுக்கான M.B.A எம் பி ஏ- படிப்பின் ஒரு பகுதி பாடம் இது.

எழுதியவர் : செல்வி AK.பவித்ரா ப்பா,ல்லப (21-Mar-17, 4:02 pm)
பார்வை : 530

மேலே