மடியில் தவழும் தங்கமே

மடியில் தவழும் தங்கமே - ஒரு
கொடியில் பூத்த முல்லையே! - தினம்
துடிக்கும் இதயம் அன்பிலே - உனை
விடியும் வரையில் கொஞ்சுவேன் - எனக்குப்
பிடித்த பாட்டைப் பாடியே!

அழகில் செல்லக் கண்ணனே - உன்
அக்கா என்னைப் பாருடா - வரும்
கனவில் கூட கைவிடேன் - இனி
அம்மா உனக்கு நானடா - என்
மனமும் குளிர்ந்த துன்னாலே!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Mar-17, 8:41 pm)
பார்வை : 66

மேலே