கவிதையே ஒரு கவிதை தா
இன்று கவிதை தினம்
கவிதையே ஒரு கவிதை தா என்றேன்
வானத்தைப் பார் என்றது .....பார்த்தேன்
நிலவு சிரித்தது
பூமியைப் பார் என்றது .....பார்த்தேன்
மலர்கள் சிரித்தன .....கவிதை வரவில்லை !
திரும்பிப் பார்த்தேன்
அவள் நடந்து வந்தாள் ...கவிதையும் உடன் வந்தது !
----கவின் சாரலன்