தாயா தாரமா
தாயா தாரமா?-என உன் தந்தை வேடிக்கையாய் கேட்டபோது,
உன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டும்,
என் கரத்தினை இறுக்கமாக பிடித்து கொண்டும்,
இருவருமே என் இரு கண்கள் என்று புன்னகை பூத்தாய்.
உன்னை பெற்றதில் பெருமைக்கொண்ட தாயும்,
உன்னை மணந்ததால் பெருமகிழ்ச்சி அடைந்த நானும்,
ஒருவரையொருவர் பார்த்து கண்களால் கூறிக்கொண்டோம்
"நாம் கொடுத்து வைத்தவர்கள்!!!"
-என்றும் அன்புடன் ஷாகி